78
இராமநாதபுரம் மாவட்ட டாஸ்மாக் பணியாளர் சங்க கூட்டம் மாவட்ட அமைப்பாளர் வேலாயுதம் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் வரவேற்றார். மாநில சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் சிறப்பு அமைப்பாளராக பங்கேற்று டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கை குறித்து சிறப்புரையாற்றினார்.
மேலும் இக்கூட்டத்தில் பணியாளர்களை நிரந்தரம் செய்வது , பணியாளர் பணி பாதுகாப்பு, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அதை தொடர்ந்து கூட்டத்தில் மாநில துணை தலைவர் சரவணன் இராஜா, மாநில அமைப்பு செலாளர் காமராஜ், மாநில துனை செயலாளர் மரகதலிங்கம் உள்ளிட்டோர் பேசினர். இறுதியாக மாவட்ட அமைப்பாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.
You must be logged in to post a comment.