Home செய்திகள் மண்டபம் அருகே 1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் 4 பேர் கைது..

மண்டபம் அருகே 1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் 4 பேர் கைது..

by ஆசிரியர்
மண்டபம் அருகேயுள்ள வேதாளை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கள்ளதோணி மூலம் கடத்த வைத்திருந்த 1கோடி மதிப்பிலான  140 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கடத்தல்காரர்கள் 4 பேரையும் மற்றும் அவர்கள் வைத்திருந்த 7 விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் மூன்று கார்களையும் பறிமுதல் செய்து மண்டபம் க்யூபிரிவு போலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை அடுத்துள்ள  வேதாளை தென் கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கள்ளதோணி மூலம் கஞ்சாவை கடத்த இருப்பதாக மண்டபம்  கியூபிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது வேதாளை கடற்கரை ஓரத்தில் மூன்று கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டதை அறிந்த கியுபிரிவு போலீசார்  காரின் அருகில் சென்று பார்த்த போது காரில் மூடைகள்  வைக்கப்பட்டிருந்தது அதனை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து காரில் இருந்த மதுரையை சேர்ந்த சிலோன் சேகர், இராமேஸ்வரம் புதுரோடு பகுதியை சேர்ந்த கோபுரத்தான்,  இராமேஸ்வரம்  மருதுபாண்டியர் நகரை சேர்ந்த விஸ்வநாதன், புதுகோட்டை மாவட்டம் கெஜதாப்பட்டிணத்தைச் சேர்ந்த கலந்தர்கனி ஆகிய நான்கு பேரையும், அவர்கள் பயன்படுத்தி வந்த ஏழு  விலை உயர்ந்த செல் போன்களையும் கைப்பற்றிய போலீசார்  அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது அவர்களிடமிருந்து ரூபாய் 1 கோடி மதிப்புள்ள 140 கிலோ கஞ்சா  மற்றும் கடத்தலுக்கு பயன் படுத்திய மூன்று விலை உயர்ந்த கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடத்தல் சம்பவத்தில் உள்ள முக்கிய புள்ளிகள் யார்? என்ற  கோணத்தில் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!