இராமநாதபுரம் அரண்மனை முன்பு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கவும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் லிங்கத்துரை முன்னிலையிலும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பொருளாளர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கழக தலைவர் சேகர், மாவட்ட மகளிரணிச் செயலாளர் மகாராணி, பரமக்குடி கல்வி மாவட்ட தலைவர் பைலட், மாவட்ட செய்தி தொடர்பாளர் காளிதாசு ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
You must be logged in to post a comment.