Home செய்திகள் வேதாளை அரசு பள்ளியில் 99-ம் ஆண்டு விழா…

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள வேதாளையில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 99-ம் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ்மவிழா ண்டபம் உதவி தொடக்க கல்வி அலுவலர் P.சுதாமதி தலைமையில் நடைபெற்றது.  இவ்விழா மண்டபம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் M.ஆரோக்கிய ராஜ்குமார் முன்னிலையில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர் ஐய்யப்பன் வரவேற்று பேசினார்.  பள்ளி தலைமை ஆசிரியர் மு.சாந்தி ஆண்டறிக்கையை வாசித்தார். நிகழ்ச்சியில் படிப்பில் முதல் மாணவராக வெற்றி பெற்றவர்களுக்கும், மற்றும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியற்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இடைநிலை ஆசிரியை மைதீன் பீவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இந்த விழாவில் மாணவ-மாணவியரின் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும்வ விழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவி கோகிலா, பள்ளி மேலாண்மை குழு தலைவி நூர்ஜகான், ஆசிரியர் பயிற்றுனர் வேலுச்சாமி, மண்டபம் ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் அன்வர்தீன் மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர். விழா முடிவில் பள்ளி ஆசிரியை பீமா நன்றி கூறினார்.

TS 7 Lungies

You may also like

1 comment

Anonymous April 11, 2018 - 12:20 am

மிக்க மகிழ்ச்சி

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!