7
தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் நீதிமன்ற தீர்ப்பையும் மீறி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாட்டின் எதிர்கட்சியான திமுக மற்றும் அதன் தோழமை கட்சி சார்பாக முழு கடை அடைப்புக்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது.
திமுக அழைப்பை ஏற்று பல் வேறு அமைப்புகளும், வர்த்தகர் சங்கங்களும் ஆதரவளித்தனர். இந்த கடையடைப்பு காரணமாக தமிழகமே ஸ்தம்பிக்கும் நிலைக்கு வந்துள்ளது. கீழக்கரையில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
அதே போல் வாகன ஓட்டுனர்கள், ஆம்னி பேருந்துகள் மற்றும் பல ஆட்டோ ஓட்டுனர்களும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று பணிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.
You must be logged in to post a comment.