Home செய்திகள் கீழக்கரையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி முழு கடையடைப்பு – வர்த்தகர் சங்கம் முழு ஆதரவு – சங்க செயலாளர் அறிக்கை..

கீழக்கரையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி முழு கடையடைப்பு – வர்த்தகர் சங்கம் முழு ஆதரவு – சங்க செயலாளர் அறிக்கை..

by ஆசிரியர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விசயத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் விதமாக நடக்கும் மத்திய அரசை கண்டித்து நாளை (04/04/2018) தமிழ்நாட்டில் உள்ள எதிர்கட்சி மற்றும் அதன் தோழமை கட்சிகளும் முழு கடையடைப்பு போராட்டம் அறிவித்தனர். அதன் அடிப்படையில் நேற்று (03/04/2018) கீழக்கரை திமுக நகரச் செயலாளர் பசீர், கீழக்கரையில் உள்ள வர்த்தகர் சங்கம் மற்றும் ஓட்டுநர் சங்கங்களுக்கும் கடையடைப்பில் கலந்து கொள்ளுமாறு நேரடியாக அழைப்பு விடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில் இன்று (04/04/2018) நடந்த வர்த்தகர் சங்க கூட்டத்தில், நாளை திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் நாளை (05/04/2018) நடத்த இருக்கும் போராட்டத்திற்கு  வர்த்தகர் சங்கம் முழுமையாக ஆதரவளித்து கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளும் என கீழக்கரை வர்த்தகர் செயலாளர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!