கீழக்கரை வடக்குத்தெரு அல்அமீன் அமைப்பு சார்பாக கோடை காலத்தை கருத்தில் கொண்டு இன்று (30-03-2018) ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு வடக்குத்தெரு பகுதியில் பொது மக்களுக்கு மோர் வழங்கப்பட்டது.
கோடை கால தொடக்கத்தை முன்னிட்டு வடக்குத் தெரு பகுதியில் தண்ணீர் பந்தலும் அல் அமீன் சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோடை காலம் முழுவதும் வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ நேரங்களில் மோர் அல்லது ஜூஸ் வழங்கப்படும் என இவ்வமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.