7
இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று (26-03-2018) நடைபெற்றது.
இப்போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இராமநாதபுர மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி நடைபெற்றது. இப்போராட்டம் காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு மாநில தலைவர் முத்துராமு தலைமை தாங்கினார். மேலும் மாநில பொருளாளர் பெருமாள், மாவட்ட செயலாளர் மயில்வாகனம் உட்பட ஏராளமான மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.