இராமநாதபுரம் மாவட்ட அதிதீவிர குற்ற தடுப்புப் பிரிவு ஆய்வாளர் தனபாலன் தலைமையிலான போலீசார் மாவட்டம் முழுவதும் காணாமல்போன இருசக்கர வாகனங்கள் தொடர்பாக விசாரணை நடத்தியதில் .. 1)மணிகண்டன் 22/18,த/பெ கணேசன், 3/3377 பட்டினம் காத்தான்.
2)அருண்குமார் 22/18 த/பெஅங்குசாமி, 11/1658, மேற்கு தெரு தெற்கு காட்டூர்.
3)அருண்பிரசாத் 20/18 த/பெ ஸ்ரீதர், மேற்கு தெரு, சாத்தான்குளம் ஆகியோரும்…
அதே போல் சங்கந்தியான்வலசையை சேர்ந்த சிறுவன் உள்ளிட்ட நான்கு பேர்கள் இருசக்கர வாகனங்களை திருடி விற்றுவிட்டதாக தெரிய வந்தது.
மேற்படி நான்கு பேரை பிடித்து விசாரித்ததில் கேணிக்கரை ,பஜார், ஏர்வாடி ,தொண்டி, மற்றும் இராமேஸ்வரம் துறைமுக காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் 11 இருசக்கர வாகனங்களையும் திருடி விற்றதை ஒப்புக் கொண்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 11 இருசக்கர வாகனங்களும் மீட்கப்பட்டு மேல்நடவடிக்கைகாக சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டது.
You must be logged in to post a comment.