Home செய்திகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக மெகா போன் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக மெகா போன் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்…

by ஆசிரியர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 13-03-2018 அன்று கீழக்கரை நடுத்தெரு பகுதிகளில் பல இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைபெற்றது.

இப்பிரச்சாரத்தில் கீழ்கண்ட தலைப்புகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் பொதுமக்கள் மத்தியில் செய்யப்பட்டது.

  • தேர்வை எதிர் கொள்ளும் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் கடைப்பிடிக்க வேண்டியவைகள்!
  • மொபைல் மூலம் திருடக்கூடிய திருடரிடம் ஜாக்கிரதை!
  • கர்ப்பிணி பெண்கள் PICME நம்பர் பெற வழிமுறைகள்!
  • எச்சரிக்கை வட மாநிலத்தவரிடம்!
  • மருத்துவ காப்பீடு திட்டத்தினை பயன்படுத்துவோம்.
  • சமூக வலைத்தளத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவோம் (தேவையற்ற லிங்க்களை க்ளிக் செய்யாதீர்கள்)
  • ஆம்புலன்ஸ் வாங்குவதன் அவசியம்.

இத்தலைப்புகளில் ஜமாத் பேச்சாளர்கள் பதுருஸமான் மற்றும் இக்ராமுல்லாஹ் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். இந்த பிரச்சாரத்தை அதிகமான மக்கள் ஆர்வத்துடன் கேட்டு பயனடைந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!