Home கீழக்கரை மக்கள் களம்அறிமுகம் சென்னையில் ‘அர் ரஹ்மான் ஜூவல்லர்ஸ்’- புதிய தங்க நகை கடை நிறுவனம் துவக்கம்

சென்னையில் ‘அர் ரஹ்மான் ஜூவல்லர்ஸ்’- புதிய தங்க நகை கடை நிறுவனம் துவக்கம்

by keelai

கீழக்கரை கிழக்குத் தெருவை சேர்ந்த சகோதரர் ரிபாய்தீன் தங்கள் நண்பர்களுடன் இணைந்து சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் ‘அர் ரஹ்மான் ஜூவல்லர்ஸ்’ என்கிற பெயரில் தங்க நகை கடையினை கடந்த மாதம் திறந்துள்ளார். பொன் நகை வியாபாரத்தில் 25 ஆண்டு கால அனுபவம் நிறைந்த சகோ. ரிபாய்தீன் தமிழகத்தின் தலை சிறந்த தங்க ஆபரண நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். கடந்த 2012 ஆண்டு முதல் தங்க நகை மொத்த வியாபாரத்திலும் கோலோய்ச்சி சிறப்பாக தொழில் செய்து வருகிறார்.

‘அர் ரஹ்மான் ஜூவல்லர்ஸ்’ நிறுவனத்தின் சிறப்பு அம்சமாக தங்க நகை சேமிப்பு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ 1000 முதல் ரூ. 5000 வரை இந்த தங்க நகை சேமிப்பு திட்டத்தில் நடுத்தர மக்களும் இணைந்து பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் இணையும் வாடிக்கையாளர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து புனித ரமலான் மாதத்தில் உம்ரா பயணம் மற்றும் துபாய் சுற்றுலா பயணம் அனுப்ப திட்டமிடப்பட்டு இருக்கிறது.

‘அர் ரஹ்மான் ஜூவல்லர்ஸ்’ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேவைகளை இலகுவாக்கும் நோக்கத்தோடு கீழக்கரை கிழக்குத் தெரு அப்பா பள்ளி அருகாமையில் ‘அர் ரஹ்மான் ஜுவல்லர்ஸின் கலெக்சன் செண்டர் தற்போது நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் தங்கள் சேமிப்புகளை சிரமமின்றி செலுத்தி பயனடைய முடியும். ‘அர் ரஹ்மான் ஜூவல்லர்ஸ்’ நிறுவனத்தின் பொன் நகை தொழில் சிறக்க கீழை நியூஸ் நிர்வாகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!