மண்டபத்தில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா…

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் தி.மு.க., கொடியேற்று விழா நடந்தது. நகர் செயலாளர் ராஜா நகரின் முக்கிய இடங்களில் கொடியேற்றினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சம்பத் ராஜா, மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர்கள் பூவேந்திரன், மொழிப்போர் வீரர் காந்தகுமார், மண்டபம் ஒன்றிய மீனவரணி அமைப்பு செயலாளர் நம்புராஜன், மாவட்ட பிரதிநிதிகள் சாதிக் பாட்ஷா, ராமமூர்த்தி, வேலு முருகானந்தம், வர்த்தக அணி செயலாளர் முகமது ஷாபி, ஒன்றிய பிரதிநிதிகள் ஆதம் முகமது, தில்லை குமார், மகளிரணி நிர்வாகி சீனி செய்ய து அம்மாள், வார்டு செயலாளர்கள் நைஸ் கிங் நாகராஜன், காளிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பலர் தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி தலைமையில் தி.மு.க, வில் இணைந்தனர்.

மண்டபம் முகாம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் முருகானந்தம், சத்தியேந்திரன், முனியசாமி ஆகியோர் முன்னிலையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சம்பத் ராஜா கட்சி கொடி ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். அதனைத் தொடர்ந்து இராஜா மஹாலில் பிறந்த நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக வெற்றியடையவும், உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு திமுகவை வெற்றியடைய செய்ய வேண்டும் என்று பேசினார்கள். விழாவில் கழக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..