தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசல் மேல் தளம் திறப்பு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை கிழக்கு கிளையின் சார்பில் இன்று புதிதாக கட்டப்பட்ட பள்ளியின் மேல் தளம் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட முதல் நாளான இன்று ஜூம்ஆ உரையை சகோதரர் முஹம்மது ஒலி MISC நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள். அதைத் தொடர்ந்து மாலை 4:30 முதல் இரவு 7:30 வரை இஸ்லாம் சம்பந்தமான கேள்விகளுக்கு மாநில பேச்சாளர் முஹம்மது ஒலி MISC பதிலளித்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..