7
கீழக்கரை சாலை தெரு உள்ள பெண்கள் தொழுகை பள்ளியில் பணியாற்றி வருபவர் மௌளவி SAM.அப்துஸ் சலாம் பாகவி. இவர் அத்தெரு மக்களுக்கு நம்பிக்கைக்கு உரியவராகவும், மார்க்கத்தை எத்தி வைப்பவராகவும் கடந்த 25ஆண்டு காலம் சிறப்பாக பெண்கள் தொழுகைப்பள்ளியில் பணியாற்றியுள்ளார்.
அவருடைய சேவையை கவுரவிக்கும் வகையில் வரும் 04-02-2018, ஞாயிறு அன்று மாலை மக்ரிபு தொழுகைக்குப் பிறகு மாலை 06.00 மணியளவில் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
இப்பாராட்டு விழா நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு சாலை வெல்ஃபேர் அசோசியேசன், அல் மதுரஸதுன் நிஸ்வானித் தாருஸ்ஸலாம் மற்றும் சாலை சமுததுவ குடும்பம் குழுமம் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
1 comment
இவர்களப் போன்ற உலமாக்களை கவுரவ ப்படுத்துவது மற்றவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும்.விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
Comments are closed.