கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியில் இன்று (28-01-2018) மழலையருக்கான 11 வது பட்டமளிப்பு விழா (11th Junior Graduation Ceremony – Pretty Poppers) பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ADSP வெள்ளத்துரை கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். மேலும் அவருக்கு நினைவு பரிசாக புனித குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு பள்ளி நிரிவாகத்தினரால் பொருளாளர் சேகு பசீர் மரைக்கா மூலமாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு வரவேற்புரையை பள்ளியின் முதல்வர் சேகு சஹ்பான் பாதுஷா வழங்கினார். பள்ளி மழலையருக்கான வரவேற்புரையை மாணவி ஹலீலா வழங்கினார். மேலும் சிறப்பு பேச்சாளராக முகம்மது சதக் பொறியியல் கல்லுர்ரி துணை பேராசிரியர் ஆசிஃப் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மழலைப் பருவ படிப்பை முடித்து விட்டு பள்ளிப் படிப்புக்கு அடி எடுத்து வைக்கும் சின்னஞ்சிறு பிஞ்சுகளுக்கு பரிசுகள் சான்றிதழ்களும் வழங்கி கவுரவிக்ப்பட்டனர். மேலும் தாசில்தார் தமீம் ராஜாவும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிக்கு முகைதீனியா பள்ளியின் தாளாளர் மௌலா முகைதீன் கல்விக்குழு துணைத் தலைவர் முகைதீன் இபுராஹிம் செயலாளர் டாக்டர்.ராசிக்தீன் மற்றும் பொருளாளர் சேகு பசீர் மரைக்கா மற்றும் பள்ளி நிர்வாகிகள் வடக்குத் தெரு ஜமாத் நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக பள்ளி மாணவி ஃபாத்திமா சல்ஹா நன்றியுரை வழங்கினார்.
You must be logged in to post a comment.