இன்று இந்தியா முழுவதும் 69வது குடியரசு தின விழா கோலாகலமாக்க் கொண்டாடப்பட்டு வருகிறது் இந்நிலையில் கீழக்கரையிலும் இன்று (26-01-2018) அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனை, காவல் நிலையங்கள், பள்ளி மற்றும் கல்லூரி நிறவனங்கள் மற்றும் இன்னும் பல அரசியல் மற்றும் சமூக அமைப்பினராலும் குடியரசு தின விழா இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் முனைவர், நடராஜன் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றிய பின்னர் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் பாராட்டி சான்றிதல் வழக்கப்பட்டது , டி. ஆர். ஒ. முத்துமாரி, உடனிருந்தார்.
கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் அ. அலாவூதின், தேசிய கொடி ஏற்றினார் மற்றும் கீழக்கரை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் திலகவதி தேசிய கொடியை ஏற்றினார்
இன்றைய நிகழ்வுகள் புகைப்படத் தொகுப்பாக உங்கள் பார்வைக்கு:-
வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி கீழக்கரை அரசு மருத்துமனை கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகம் கீழக்கரை POPULAR FRONT OF INDIA சார்பாக லெப்பை டீ கடை அருகில் ஹைரத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி மக்தூமியா மேல்நிலப்பள்ளி ஹமீதியா மேல்நிலைப்பள்ளி கீழக்கரை காவல்நிலையம் ஹமீதியா தொடக்கப்பள்ளி SDPI கட்சி சார்பாக ப்யர்ல் மெட்ரிக் பள்ளி கும்பிடுமதுரை தொடக்கப்பள்ளி கீழக்கரை துணை மின் நிலையம் முகம்மது சதக் பொறியியல் கல்லூரி. செய்யது ஹமீதா கலைக் கல்லூரி அல் பய்யினாஹ் பள்ளி ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி..
You must be logged in to post a comment.