முகம்மது சதக் பாலிடெக்னிக் வளாகத்தில் 23-01-2018 அன்று ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் டி.வி.எஸ் சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அலாவுதின் தலைமையுரையாற்றினார். கல்லூரி துணை முதல்வர் சேக்தாவுது மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். மரியதாஸ் நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் வரவேற்றார்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் டிப்ளமோ மின்னியல், இயந்திரவியல், மின்னணுவியல் துறை மற்றும் தொடர்பியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் டி.வி.எஸ் சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் நிறுவன நிர்வாகிகள் அந்நிறுவனத்தின் செயல்பாடுகள், ஊதியம் மற்றும் சலுகைகள் போன்றவற்றை மாணவர்கள் மத்தியில் விளக்கி கூறினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் குறைந்த பட்சம் 12,000/- ரூபாய் சம்பளத்துடன் 110 மாணவர்களுக்கு வேலைக்கான ஆணை வழங்கப்பட்டது.
You must be logged in to post a comment.