கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் இன்று (05-01-2018) “தித்திக்கும் திருமறையின் மகிமைகள்” என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இப்புத்தகத்தை தம்பி சாகிபு சித்திக்பரிதா எழுதியுள்ளார். இந்நிகழ்ச்சியின் வரவற்புரையை தமிழ்துறை தலைவர் வே.அகிலா வழங்கினார். நிகழ்ச்சிக்கு சுல்தான் மரைக்காயர் மற்றும் செய்யது முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிக்ச்சியின் தலைமையுரையை இராமநாதபுரம் தமிழ்சங்கம் தலைவர் அப்துல்சலாம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருந்தினராக ஏபிஜே அப்துல்கலாம் இன்டர்நேசனல் பவுன்டேசன் நிர்வாக அறங்காவலர் ஏபிஜேஎம் நசிமா மரைக்காயர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளருக்கு வாழ்த்துரையை சீதக்காதி அறக்கட்டளை செயலாளர் ஹாலித் ஏ.கே.புகாரி, தாசிம் பீவி கல்லூரி தாளாளர் மருத்துவர் ரஹ்மத்துன்னிஷா அப்துர்ரஹ்மான், கல்லூரி முதல்வர் முனைவர் சுமையா, கலீல் ரஹ்மான், ஹாஜியார் மற்றும் கவிஞர் தஸ்லிம் ஹாஜா ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியின் இறுதியாக தாசிம் பீவி கல்லூரி உதவி பேராசிரியை இரா.விசாலாட்சி வழங்க, நிழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
You must be logged in to post a comment.