Home செய்திகள் காஞ்சிரங்குடியில் தவ்ஹீத் ஜமாத் சார்பாக திருக்குர்ஆன் மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது..

காஞ்சிரங்குடியில் தவ்ஹீத் ஜமாத் சார்பாக திருக்குர்ஆன் மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது..

by ஆசிரியர்

கீழக்கரை காச்சிரங்குடியில் இன்று (30.12.2017) மாலை 6:30 மணி முதல். கீழக்கரை கிழக்கு கிளை சார்பாக திருக்குர்ஆன் மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இப்பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் அயூப்கான் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சத்தார் அலி, “தவ்ஹித் ஜமாஅத்தின் நற்பணி”* என்ற தலைப்பில் உரையாற்றினார்.  பின்னர் கலீல் ரஹ்மான் “மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன்”* என்ற தலைப்பிலும், சிறுமி நிஃபானாஸ் “சிந்திக்க தூண்டும் இஸ்லாம்”* என்ற தலைப்பிலும், அதைத் தொடர்ந்து மாவட்ட துணை செயலாளர் இம்ரான்கான் பொதுக்கூட்ட தீர்மானத்தை வாசித்தார்.

பின்னால் மாநில செயலாளர் R.ரஹ்மத்துல்லாஹ் “அன்பான அழைப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியாக சத்தார் அலி நன்றியுரை மற்றும் துஆவுடன் பொதுக்கூட்டம் நிறைவடைந்தது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!