கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் 15-12-2017 அன்று தொழிற் கடன் உதவி முகாம்…

கீழக்கரையில் வரும். 15-12-2017 அன்று தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு தொழில் கடன் முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த சிறப்பு முகாம் மாவட்ட தொழில் மையம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாமில் ₹.5,00,000/- முதல். ₹25,00,000/- லட்சம் வரை கொடுக்கப்பட்ட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் கடன் பெறுபவர்களுக்கு அரசாங்கம் நகர்ப்புறத்தில் உள்ளவர்களுக்கு 35% மானியமும், கிராமத்தில் வசிப்பவர்களுக்கு 25% மானியமும், 3% வட்டித் தொகையில் மானியமும் வழங்குகிறது.

இந்த தொழிற் கடன் பெறுவதற்கு குறைந்த பட்சம் ஐ.டி படிப்பு அல்லது பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு படித்தவர்களாக இருத்தல் வேண்டும்.

இந்த முகாம் வரும் 15-12-2017 அன்று இஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் காலை 10.00 மணி அளவில் தொடங்கும் என மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..