திட்டக்குடி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட ராமநாதபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், வாலாந்தரவை கிராமம், தெற்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் சரவணன்,37. இவர் ராமநாதபுரம் மாவட்டம், கேணிக்கரை போலீஸ் எல்லை மற்றும் மதுரை மாவட்டம், கருப்பையூரணி போலீஸ்எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு கொலை வழக்குகள், தஞ்சாவூர், விருதுநகர், மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு வழிப்பறி, திருட்டு, கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்டதாக 19வழக்குகள் உள்ளன.
கடந்த நவம்பர் 7ஆம் தேதி கடலூர் மாவட்டம், ராமநத்தத்தில் சம்சா வியாபாரி செல்வம் என்பவரை கத்தியால் வெட்டிவிட்டு அவரிடமிருந்து அரைபவுன் செயின், செல்போன், வாட்ச் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றவரை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
சரவணனை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கடலூர் மாவட்ட எஸ்.பி.,விஜயகுமார், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனடிப்படையில் கடலூர் மாவட்ட கலெக்டர் பிரசாந்த வடநேரே, உத்தரவின் பேரில் ராமநத்தம் போலீசார் சரவணனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்
You must be logged in to post a comment.