Home செய்திகள் பல போட்டிகளில் பரிசுகளை குவித்த எக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி..

பல போட்டிகளில் பரிசுகளை குவித்த எக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி..

by ஆசிரியர்

திருப்புல்லாணி வட்டார அளவில் “அனைவருக்கும் கல்வி இயக்கம்” சார்பில் பெண்கள் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் ஆகிய தலைப்புகளில் நடத்திய பேச்சு,கட்டுரை மற்றும் ஓவிய போட்டியில் எக்ககுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பரிசுகளை வாங்கி குவித்துள்ளனர்.

தொடக்க நிலை அளவில் நடைபெற்ற ஓவிய போட்டியில் இரண்டாம் வகுப்பு மாணவன் மு.அஹமது முஜாகிதீன் முதல் இடத்தையும், பேச்சு போட்டியில் ஐந்தாம் வகுப்பு மாணவன் மு.முகம்மது ரிஸ்வான் அலி இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

உயர் தொடக்க நிலை அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் ஏழாம் வகுப்பு மாணவி மு.ரம்யா முதல் இடத்தையும், ஓவிய போட்டியில் ஆறாம் வகுப்பு மாணவன் கி.ரூபன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இதற்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசு காசோலைகளையும் பெற்றோர்கள் முன்னிலையில் கல்வி துறை அதிகாரிகள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்கினர்.

போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்கள் இராமநாதபுரம் மாவட்ட அளவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக்கு பெருமை தேடித்தந்த மாணவ செல்வங்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் பள்ளி தலைமை ஆசிரியை க.அமுதவல்லி,முஸ்லிம் ஜமாஅத் முக்கிய நிர்வாகி முகம்மது சிராஜுதீன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!