நிழற்குடை இல்லாத கீழக்கரை பழைய பேருந்து நிலையம்.. மக்களின் அவதியை போக்குவார்களா அதிகாரிகள்??

கீழக்கரை பழைய பேருந்துநிலையத்திற்கு தினமும் பல உள்ளூர் பேருந்துகள் வந்து செல்கின்றன. ஆனால் மக்கள் காத்திருக்க முறையான நிழற்குடை எதுவும் கிடையாது. நிழலுக்கு பக்கத்தில் தனியார் இடங்களில் ஒதுங்க வேண்டிய அவலமே உள்ளது.

வெயில் காலங்களில் பொதுமக்கள் படும் அவஸ்தைக்கு அளவே கிடையாது. வேறு வழியில்லாமல் கலங்கரைவிளக்கம் கட்டிடம் மற்றும் மக்கள் கூட்டம் கூட்டமாக அங்காங்கள வெயிலின் கொடுமையில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டி உள்ளது. இன்றைய விளம்பர உலகில் எந்த ஒரு தனியார் நிறுவனத்தை அணுகினாலும் வசதி செய்து தருவார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்களின் துயரத்தை கருத்தில் கொண்டு வசதி செய்ய முயற்சி செய்வார்களா??

புனித ரமலான் வாழ்த்துக்கள்..