கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்திய +2 மாணவர்களுக்கான “வெற்றி நமதே” கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் சதக் அறக்கட்டளைத் தலைவர் யூசுப் சாகிப் தலைமையிலும், அறக்கட்டளை இயக்குநர் ஹாமீது இபுராஹிம் முன்னிலையிலும் நடைபெற்றது.
முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிகுலேசன் பள்ளி முதல்வர் நந்தகோபால் அனைவரையும் வரவேற்றர். அறக்கட்டளைத் தலைவர் தனது தலைமையுரையில் “+2 மாணவர்களாகிய நீங்கள் நமது இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த +2 மாணவர் யாராகினும் மாநிலத்தில் முதலிடம் பெற்றால் ரூ.1 இலட்சம். மாநிலத்தில் இரண்டாமிடம் பெறும் மாணவருக்கு ரூ. 50 ஆயரமும் வழங்கப்படும். அதே போல் எங்களது சதக் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் தஸ்தஹிர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து படித்தால் அவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் கல்வி கட்டணத்தில் மட்டும் 25 முதல் 50 சதவிகிதம் சலுகைகள் வழங்கப்படும் “எனவும் தெரிவித்தார்.
தேர்வில் அதிக மதிப்பெண் பெற கையாள வேண்டிய வழிமுறைகள் பற்றி ஒவ்வொரு பாடப்பிரிவுகளில் சிறந்து விளங்கிய காக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளி, இயற்பியல் பிரிவு ஆசிரியர் இளங்கோவன், செல்வநாயகபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி, வேதியியல் பிரிவு ரவிக்கண்ணன், இராமநாதபுரம். எலைட் ஒருங்கிணைப்பாளர் கணித பிரிவு ஆசிரியர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று நாளைய வெற்றியாளர்களாக விளங்க வேண்டும் என்று ஆலோசனைகளை விளக்கங்களுடன் எடுத்துக் கூறினர்.
மேலும் சாதனையாளர்கள் உருவாவது அவர்களுடைய முயற்சியுடன் சேர்ந்த பயிற்சி மற்றும் அதனை தொடர்ச்சியாக செய்தால் தான் நாளைய சாதனை படைக்கும். சிறந்த பொறுயாளராக உருவாவதற்கு விடாமுயற்சியுடன் படித்து வெற்றி பெற வேண்டுமென வாழ்த்தினர். வெற்றி நமதே நிகழ்ச்சியின் மூலம் +2 தேர்வினை எவ்வாறு எழுதுவது மற்றும் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான வழிமுறைகளை கேட்டு பயனடைந்தனர்.
முஹம்மது சதக் ஏ. ஜே. கல்லூரி முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி நெறியாளர் முனைவர் முஹம்மது ஜஹாபர்ம், முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மைதீன்ம், முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் மற்றும் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரஜபுதீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்லூரியின் கணினி பயன்பாட்டியல் துறை துணைப் பேராசிரியர் தீபர் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகைகள் கிடைக்கக்கூடியது பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
இயந்திர பொறியியல் துறை பேராசிரியர் ஜெயசீலன் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கார்த்திகேயன், ஷேக்யூசுஃப் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நஜ்முதீன் ஆகியோர் செய்திருந்தனர்.
You must be logged in to post a comment.