திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதமும் மேலாண்மைத் துறை (MBA – Master in Business Administration) மாணவர்களால் வணிகவியல் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த வருடமும் வரும் அக்டோபர் 11 மற்றும் 12ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கல்லூரி விழா TIECOONS – 2017 என்ற தலைப்புடன் இந்தியாவில் உள்ள பல முன்னனி கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். இத்திருவிழவில் பொழுது போக்கு அம்சம் மட்டும் இல்லாமல் கல்வி சம்பந்தமான பல விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகின்றன். உதாரணமாக BEST CEO, BEST MANAGEMENT TEAM, HR GAME, BUSINESS QUIZ, STOCK WAR, MECHANDISER MANIAC, BRAND ADS, CORPORATE SHOW, BEST ENTREPRENEUR, FINANCIAL EXPERT, PAPER PRESENTATION போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்தியாவிலேயே வணிகவியல் முதுநிலை பட்டதாரிகளால் நடத்தப்படும் மிகப் பெரிய கல்லூரி திருவிழா என்பது குறிப்பிடதக்கது. இப்போட்டிகளில் கலந்து கொண்டு முதல் இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூபாய். 5 லட்சம் வரை பரிசு தொகை வழங்கப்படும் என்று அறியப்படுகிறது.
You must be logged in to post a comment.