கீழக்கரை நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தீவிரம்…

கீழக்கரை முக்கிய சாலைகளில் போக்குவரத்து செல்வதற்கு மிகவும் இடையூராக பல ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை செப்டம்பர் மாதம் 25ம் தேதிக்குள் அகற்ற கீழக்கரை ஆணையரால் அறிக்கை விடப்பட்டுள்ளது. அவ்வாறு 25ம் தேதி காலை 10 மணிக்குள் அகற்றப்படாத பட்சத்தில் நகராட்சியால் அகற்றப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் அதற்கான தொகை வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

கீழக்கரை நகரின் நலனை விரும்பும் மக்கள் ஆணையரின் வேண்டுகோளை ஏற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற முன் வர வேண்டும்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..