கீழக்கரையில் அனைவருக்கும் வீடு திட்டம் முகாம் தொடங்கியது..

“அனைவருக்கும் வீடு திட்டம்” முகாம் 13,14 மற்றும் 15 தேதிகளில் நடக்கும் என்று அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அதுபோல் இன்று நகராட்சி கூட்ட அரங்கில் தொடங்கியது. ஏற்கனவே மனு கொடுத்தவர்கள் மற்றும் புதிய மனுதாரர்கள் தங்களுடைய ஆவணங்களை சமர்பித்தனர்.

முகாமை தொடர்ந்து அரசின் விதிப்படி தகுதியுள்ள பயனாளிகளுக்கு 2.10 லட்சம் ரூபாய் மானியமாக வீடுகட்ட வழங்கப்படும். இந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்று வருகின்றனர். இது சம்பந்தமாக கீழைநியூஸ் வெளியிட்ட செய்தி கீழே:-

கீழக்கரை நகராட்சியில் ‘அனைவருக்கும் வீடு’ திட்ட முகாம் 13, 14 மற்றும் 15 தேதிகளில் நடைபெறுகிறது – ஏழை மக்கள் பயன் பெற வேண்டுகோள்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..