கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் ரஜபுதீன் அவர்கள் தலைமை தாங்கினார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் சேதுபதி அரசினர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் அர்ச்சுனன் அவர்கள் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், “ஆசிரியர் பணியானது புனித சேவைக்கு ஒப்பாகும். ஆசிரியர் பணி ஒன்றே போட்டி பொறாமையே இல்லாத உன்னத பணியாகும். மிகச்சிறந்த சமுதாயத்தை உறுவாக்கும் வல்லமை ஆசிரியருக்கே உண்டு. மேலும் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல்கலாம் அவர்கள் ஓய்வுக்குப்பின் ஆசிரியராக பணியாற்றுவதே தனக்கு விருப்பமாகும் என்று கூறியிருக்கிறார்.
மேலும் அவர் தனது இறுதி நாளில் கூட பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போதே அவர் உயிர் பிரிந்தது. அத்தகைய சிறப்புமிக்க ஆசிரியப்பணி ஒரு அறப்பணியாகும். ஆசிரியப் பணியானது ஏணியாக இருந்து ஞானிகளை உருவாக்கும் சிறந்த சேவையாகும். ஆகவே மாணவர்கள் அனைவரும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை மதித்து கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்”என்றார்.
இந்நிகழ்ச்சியின் முன்னதாக மேலாண்மைத் துறைத்தலைவர் விமலி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். முதுகலை வணிகவியல் துறைத்தலைவர் பாலகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இறுதியாக தமிழ்த்துறைத்தலைவர் பாலமுருகன் அவர்கள் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் சுலைமான், ராஜமாணிக்கம், எஸ்தர் கண்மணி, முதுகலை கணினி அறிவியல் துறைத்தலைவர் கார்த்திக் மற்றும் செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் ஆனந்த் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் மற்றும் தாளாளர் யூசுஃப் மற்றும் செயலர் ஷர்மிளா ஆகியோர் வாழ்த்துக்களையும், பாராட்டினையும் தெரிவித்திருந்தனர்.
You must be logged in to post a comment.