7
தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து விவசாய சங்கம் மற்றும் அனைத்து கட்சி சார்பில் நடைபெற்ற மாபெரும் ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் அதனுடைய அரசியல் அமைப்பான மனிதநேய மக்கள் கட்சி இராமநாதபுரம் (கிழக்கு) மாவட்ட பொறுப்பு குழு சார்பில் மாவட்ட குழு தலைவர் பரக்கத்துல்லாஹ் அவர்கள் தலைமையில் பெருந்திரளாக கலந்து கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் பீர் முகமது கண்டன உரை நிகழ்த்தினார்கள். மேலும் இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ரைஸ் இபுராஹிம், நகர் பொருலாளர் சதக் தம்பி முன்னாள் மாவட்ட செயலாளர் அன்வர் அலி மற்றும் தொண்டர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.