கீழக்கரையில் கணவன் மனைவி தகராறில் கணவன் தூக்குப் போட்டு தற்கொலை…

கீழக்கரை வெள்ளாளர் தெருவில் வசித்து வருபவர் தினகரன். இவர் கீழக்கரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பல வருடங்களாக ஓட்டுனராக வேலை பார்த்து வந்தவர்.

நேற்று (09-08-2017) இரவு கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த தினகரன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த காவல்துறையினர் உடலை கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.


புனித ரமலான் வாழ்த்துக்கள்..