கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (10-08-2017) கீழக்கரை நகராட்சி சார்பாக டெங்கு காய்ச்சல் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட அளவிளானா அதிகாரிகள் மற்றும் கீழக்கரை ஆணையர் வசந்தி கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர்.
அதேபோல் இன்று (10-08-2017) கீழக்கரை செய்யது ஹமீதா கலை கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் விதமாக டெங்கு தடுப்பு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இம்முகாமிற்கு சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் ரோட்டரி சங்க கவர்னர் சந்திரபோஸ் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் ஏராளமான மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கீழக்கரை நகராட்சி, சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி தலைமையில் சிறப்பாக செய்திருந்தனர்.
You must be logged in to post a comment.