Home செய்திகள் “இந்தியாவை அடித்துக் கொல்லாதே” – கீழக்கரையில் SDPI கண்டன கூட்டம்…

“இந்தியாவை அடித்துக் கொல்லாதே” – கீழக்கரையில் SDPI கண்டன கூட்டம்…

by ஆசிரியர்

SDPI கட்சி இந்தியா முழுவதும் ஆகஸ்ட் மாதம் முதல் “இந்தியாவை அடித்துக் கொல்லாதே” என்ற தலைப்பில் மத்தியில் ஆளும் கட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்து போராட்டங்களும் கண்டன கூட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

இன்று (08-08-2017) மாலை கீழக்கரையில் SDPI கட்சி சார்பாக முஸ்லிம் பஜார் லெப்பைக் கடை அருகில் “இந்தியாவைக் கொல்லாதே, வலியுடைய இரத்தம் வழியும் இந்தியா” என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த தெருமுனைக் கூட்டத்தில் கீழக்கரை SDPI தலைவர் உட்பட பல நிர்வாகிகள் சிறப்புரை மற்றும் கண்டன உரை நிகழ்த்தினர். அதேபோல் SDPIன் தோழமை அமைப்பான SDTU நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

மேலும் இக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்களும் கலந்நு கொண்டனர்.


TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!