7
கீழக்கரை கடற்கரை பகுதியில் 60 வயது மதிக்ககூடிய ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியது. கீழக்கரை கோல்டன் பீச் எனப்படும் கடற்கரை அருகில் ஆமைகூடு பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கியது. அச்சடலத்தின் முகத்தில் மீன்கள் கடித்த காயம் தென்பட்டது.
இது குறித்து கீழக்கரை மெரைன் காவல்துறை எஸ் ஐ பாலகிருஸ்னன் ஏட்டு கண்ணன் உள்ளிட்டோர் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment.