கீழக்கரை நகராட்சி சார்பாக தூய்மை இந்தியா இயக்கம் 2017 விழிப்புணர்வு கூட்டம்…

கீழக்கரையில் இன்று (29-06-2017) நகராட்சி சார்பாக தூய்மை இந்திய இயக்கம் 2017 விழிப்புணர்வு கூட்டம் மக்தூமியா பள்ளியில் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேனி முன்னிலையில் நடைபெற்றது.  இந்த விழிப்புணர்வு முகாம் கீழக்கரை ஆணையர் வசந்தி ஆணபை;படி சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி  தலைமையில் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் மத்தியில் ஈரமான குப்பபைகள் மற்றும் உலர்ந்த குப்பைகளை பச்சை மற்றம் நீல நிற கூடைகளில் பிரித்துப்போடுவது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் அப்பள்ளியின் மூத்த நிர்வாகியும் முன்னாள் நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஹாஜா முகைதீன் முன்னாள் கவுன்சிலர் அன்வர் அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் திறந்த வெளியில் மலம் , ஜலம் கழிப்பது மற்றும் குப்பைகளை தரம் பிரித்தல் போன்றவைக்கான உறுதிமொழி பத்திரமும் ஆசிரிய மக்கள் மற்றும் மாணவர்களிடம் பெறப்பட்டது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..