மக்கள் விழிப்படைந்தால் வியாபாரிகள் ஏமாற்ற முடியாது…

இன்று எடை அளவில் வாங்கும் பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் உள்ளதா? என்றால், உறுதியாக யாராலும் கூற முடியாது. எப்பொழுதும் அனைவரும் ஓரு சந்தேக மனநிலையில் தான் பொருள் வாங்கி செல்வார்கள்.

பொதுமக்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் பனைக்குளம் மீன் சந்தை அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக இலவசமாக எடை பார்க்கும் இயந்நிரம் வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கடைகளில் பொருள் வாங்கும் பொதுமக்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள எடை இயந்திரம் மூலம் வாங்கும் பொருட்களை சரிபார்த்து கொள்ள ஏதுவாக உள்ளது. இது அப்பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுபோல் ஒவ்வொரு ஊரிலும் உள்ள சமூக அமைப்புகள் இது போன்ற எடை இயந்திரத்நை நிறுவினால் பொதுமக்கள் பலன் அடைவார்கள்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

1 Comment

  1. பயனுள்ள யோசனை, கொடுக்கும் பணத்துக்குப் பொருள் வாங்கிச் செல்கிறோம் என்கிற மனநிறைவோடு மக்கள் வீடு செல்வார்கள். முன்னதாக நமதூர் மக்கள் நலப்பாதுகாப்புக் கழகமும் பழையவகைத் தராசு மற்றும் எடைக்கற்கள் சரிபார்த்தல் விடையமாக சம்பந்தப்பட்ட துறையிடம் மனுச்செய்திருக்கிறார்கள் என அறிகிறேன். எந்த அளவுக்கு வியாபாரிகள் ஒத்துழைப்புக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை….

Comments are closed.