6
கீழக்கரையில் வெளியூரைச் சார்ந்த இரண்டு இளைஞர்கள் இன்று அகமது தெரு பகுதிகளில் தெய்வீக அன்பு அறக்கட்டளை என்ற பெயரில் முதயோர் இல்லம் என்று கூறி வசூல் செய்துள்ளார்கள்.
அவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் அடைந்த நிசா பவுன்டேசன் நிர்வாகி வசூல் செய்தவர்கள் கொடுத்த நோட்டிசில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது, வசூலுக்கு வந்த நபர்களுக்கும், தெய்வீக அன்பு அறக்கட்டளைக்கும் எந்த தொடர்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. உடனே நிசா பவுன்டேசன் நிர்வாகி அவ்விரு நபர்களையும் காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளார்.
தற்சமயம் இதுபோன்ற போலி கும்பல்கள் அதிகமாக இருப்பதாகவும், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று நிசா பவுன்டேசன் நிர்வாகி கேட்டு கொண்டார்.
You must be logged in to post a comment.