பாம்பன் பாலத்தில் விபத்து – அதிர்ஷடவசமாக பயணிகள் உயிர் தப்பினர்..

இன்று (07-05-2017) ராமேஸ்வரம் சுற்றுலாவந்த வேன் நிலைதடுமாறி பாம்பன் பாலத்தின் மோதியது. மோதிய வேன் தடுப்புசுவரை உடைத்து விபத்துக்குள்ளானது. ஆனால் அதிஷ்டவசமாக அதில் பயணம் செய்த 14பேர் உயிர்தப்பினர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும், பாதிப்பும் ஏற்பட்டது. இது சம்பந்தமாக அப்பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

இதுபோன்ற விபத்து நடைபெறுவதற்கு முக்கிய காரணம், சுற்றுலா வரும் பயணிகள் வாகனம் செல்லும் வழியை அடைக்கும் விதமாக நிறுத்தி பாலத்தை சுற்றி பார்ப்பதுதான். சுற்றுலா வரும் பயணிகள் பாதுகாப்பு கருதி பாதுகாப்பான இடத்தில் வாகனங்களை நிறுத்தினால் இது போன்ற விபத்தை தடுக்கலாம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..