Home கல்வி கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கடல்சார் துறை 2013-17 – ம் ஆண்டு மாணவர்களின் பட்டப்படிப்பு நிறைவு விழா

கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கடல்சார் துறை 2013-17 – ம் ஆண்டு மாணவர்களின் பட்டப்படிப்பு நிறைவு விழா

by ஆசிரியர்

கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் 2013-17 ஆண்டு கடல்சார் துறை மாணவர்களின் பட்டப்படிப்பு நிறைவு விழா கீழக்கரை முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் முகம்மது யூசுப் சாகிப் தலைமையிலும்,  கல்லூரி டீன் முகம்மது ஜஹாபர் மற்றும் கல்லூரி முதல்வர் அப்பாஸ் மைதீன் முன்னிலையிலும் கொண்டாடப்பட்டது.

கல்லூரி கடல்சார் துறைத் தலைவர் தங்கவேலு அனைவரைவும் வரவேற்றார். முகம்மது சதக் அறக்கட்டளை, தலைவர் முகம்மது யூசுப் சாகிப் அவர்கள் கலந்து கொண்டு கடல்சார் வாணிபத் துறையின் கொடியை ஏற்றி வைத்து, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, 2013-17 ஆண்டு சிறந்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் 2013-17 ஆண்டின் சிறந்த மாணவருக்கு பரிசுக் கோப்பையை வழங்கினார்.

இவ்விழாவினை மக்கள் தொடர்பு அலுவலர் நஜ்முதீன் மற்றும் கல்லூரி கடல்சார் துறைதுணை பேராசிரியார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!