கைப்பந்து போட்டியில் தொடர்ந்து வாகை சூடும் கீழை இளைஞர்கள்..

கீழக்கரையைச் சார்ந்த இளைஞர்கள், மேற்பனைக்காடு பேட்டை வளர்பிறை அணியினர் சார்பாக நடத்தப்பட்ட கைப்பந்துக்கான சுழற் கோப்பை போட்டியில் முதல் பரிசாக ரூபாய்.8000/- வென்றார்கள்.

இந்தப் போட்டியில் முதல் பரிசைக் கீழக்கரை அணியும், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது பரிசை கீரமங்கலம், திருப்பாலக்குடி, மேற்பனைக்காடு அணியினர் முறையே வென்றனர்.

தொடர்ந்து வாகை சூடி வரும் கீழக்கரை அணிக்கு கீழை நியூஸ் நிர்வாகம் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது

புனித ரமலான் வாழ்த்துக்கள்..