8
கீழக்கரை நகராட்சி சார்பாக கீழக்கரை நகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தொடர்ச்சியாக பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று 13.02.2017 கிழக்குத் தெரு ஹைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை நகராட்சி ஆணையாளர் சந்திரசேகர் அறிவுறுத்தலின் பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி துவங்கி வைத்தார். கீழக்கரை நகரை சுகாதாரமான நகராக மாற்ற அனைத்து ஆலோசனைகளையும் அதிகாரிகள் வழங்கினர். நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர். ஹாஜா, தொழிநுட்ப உதவியாளர் உதயகுமார் மற்றும் ஆசிரிய பெருமக்கள் உடனிருந்தனர்.
You must be logged in to post a comment.