பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம்

கீழக்கரை தாலுகா கீழக்கரை பிர்க்கா ஏர்வாடி கிராமத்தில் உள்ள சந்தனக்கூடு தைக்காகூடத்தில் கீழக்கரை  வட்ட வழங்கல் அலுவலர்.கே எம் தமிம்ராஜா தலைமையிலும் கூட்டுறவு சார்பதிவாளர்.மீனாட்சி சுந்தரம் முன்னிலையிலும் நடைபெற்றது

இம்முகாமில் குடும்பஅட்டையில் பெயர்சேர்த்தல், பெயர்நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் வரப்பெற்ற அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு உரிய உத்தரவுகள் 230 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இம்முகாமில்  கீழக்கரை  வருவாய் ஆய்வாளர் திரு காளிஸ்வரன் கிராம நிர்வாக அலுவலரகள் ஆதிலட்சுமி கிராம பிரமுகர்கள் அஜ்மல்கான் சைபுல் ரஹ்மான், சிக்கந்தர் சுல்தான் உட்பட கிராம முக்கியஸ்தர்களுடன் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்  ஏர்வாடி கிராமத்தில் முதன் முறையாக இது போன்ற முகாம் அமைத்த தமிழக அரசுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும் பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..