11
கீழக்கரையில் இருந்து இராமநாதபுரம் செல்லும் வழியில் இராஜசூர்யமடை அருகில் இரும்பு கம்பி ஏற்றி சென்ற டெம்போ வேன் அரசு பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்துக்கு முக்கிய காரணம் அஜாக்கிரதையான வகையில் எந்த வகையான பாதுகாப்பும் இல்லாமல் இரும்பு கம்பிகளை ஏற்றி வந்ததாகும். இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கும் வண்ணம் போக்குவரத்து காவல்துறையினர் ஓட்டுனர்களுக்கு முறையான விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்.
மேலும் அது போல் முறையான ஒப்புதல் இல்லாமல் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது அரசு அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுப்பது மூலம் விபத்துக்களை தடுக்க முடியும்.
You must be logged in to post a comment.