கீழக்கரையில் நவீன ஆடு வதை செய்யும் கூடம் செயல்பட துவங்கியது..

கீழக்கரை நகராட்சியில் இன்று முதல் (04-01-2017) நவீன ஆடு வதை செய்யும் கூடம் துவங்கியது.  இது சம்பந்தமான செய்தி நேற்று நம்முடைய கீழை நியூஸ் வலைதளத்தில் வெளியிட்டு இருந்தோம்.  நேற்று நடந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சந்திரசேகர் மற்றும் நகராட்சி அலுவலர் திண்ணாயிரமூர்த்தி ஆகியோர் இதை வலியுறுத்தினார்கள்.

     

அதைத் தொடர்ந்து இன்று முதல் ஆட்டிறைச்சி  கடை உரிமையாளர்கள் நகராட்சி வழிகாட்டுதலுக்கு உட்பட்டு கால்நடை மருத்துவர் (Veterinary Doctor) முன்னிலையில் அறுத்து தகுதி சான்றிதழ்கள் பெற்று விற்பனை நிலையங்களுக்கு எடுத்துச் சென்றனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..